Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திட்டக்குடி அருகே பகுதி நேர புதிய ரேஷன் கடை”….. அடிக்கல் நாட்டிய அமைச்சர் சி.வெ வெங்கடேசன்….!!!!!!!!!

திட்டக்குடியை அடுத்த இறையூர் கிராமத்தில் பகுதி நேர புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்றம் முன்னாள் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கியுள்ளார். காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் எஸ்.மா.கந்தசாமி வரவேற்றுள்ளார்.  ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரத்ன சபாபதி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வமணி கந்தசாமி போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டியுள்ளார்.

அதன்பின் அவர் பேசும் போது, பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் செம்மையன், நகர் செயலாளர் குமரவேல், திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கூட்டுறவு வங்கி செயலாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், வேளாண் துறை காமராஜ், வீசிக திட்டக்குடி தொகுதி துணை செயலாளர் வேந்தன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் செம்மல் மாவட்டத் துணை அமைப்பாளர் சேகர், பெண்ணாடம் நகர செயலாளர் ஆற்றலரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |