2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த அக்டோபர் மாதம் பிரிவதாகக் கூறியதுடன் இருதரப்பிலும் விவாகரத்து தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில் 3 மாதத்திற்கு பிறகு நடிகை சமந்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவரின் விவாகரத்துப் பதிவை திடீரென நீக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் நாக சைதன்யாவுடன் சமந்தா இணைய இருக்கிறாரா என்று குழப்பம் அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து சமந்தா தரப்பில் இதுவரையிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.