Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காவு வாங்கிய காவிரி ஆறு…. கண்ணீரில் முங்கிய டிரைவரின் குடும்பம்…. போலீஸ் விசாரணை….!!

காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேகர் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். ஈரோடு ரயில்வே சரக்கு கிடங்கில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று நாமக்கல் பள்ளிபாளையத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதியிலுள்ள கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த சேகர் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் மீனவர்களின் உதவியுடன் சேகரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |