கூட்டுறவு வங்கி ஊழியர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூட்டுறவு வங்கி ஊழியரான பிச்சாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிச்சாண்டி மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சாண்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.