டிக்கெட் பரிசோதகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் ரயில்வே நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி இரவு பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.