Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“திடீரென பெய்த மழை”…. மோட்டார் சைக்கிளுடன் குளத்தில் மூழ்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

குளத்தில் மூழ்கி உயிரிழந்த வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நந்திமாங்குடி கிராமத்தில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் பணிபுரியும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து  நேற்று மாலை விக்னேஷ் கீழபுழுதிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது  அங்கு கனமழை பெய்துள்ளது.

இதனால் விக்னேஷின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்துவிட்டது. இதில் நீரில் மூழ்கிய விக்னேஷ் உயிரிழந்த நிலையில் பிணமாக மிதந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விக்னேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |