ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மான்கொம்பு சாலையில் 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனை பார்த்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து பேருந்து நிறுத்தியுள்ளார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. கல்வராயன்மலை பகுதிக்கு சரியான சாலை வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.