Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எறிந்த வீடுகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன்-மனைவி…. ஈரோட்டில் பரபரப்பு…..!!!!

வீடுகள் திடீரென தீப்பிடித்து எறிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே மாரநாய்க்கனூர் பகுதியில் துரைசாமி-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் துரைசாமியின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் அருகில் உள்ள சிமெண்ட் கூரையால் வேயப்பட்ட துரைசாமியின் மற்றொரு வீட்டிற்கும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி 2 பேரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து பெருந்துறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த வீடுகளை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அழைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |