Categories
தேசிய செய்திகள்

திடீரென பற்றி எரிந்த தீ…. கோர விபத்தில் பறிபோன 7 உயிர்…. தலைநகரில் பரபரப்பு…..!!!!!

டெல்லியின் கோகுல்புரி பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு உறங்கிகொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். இந்நிலையில் விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து ஏறக்குறைய 13 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அவர்கள் பல்வேறு போராட்டத்திற்கு பின் அதிகாலை சுமார் 4 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியது. மேலும் விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “காலையில் இந்த சோகமான செய்தியைக் கேட்டேன். நானே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |