மத்திய உணவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை இருப்பதை உறுதி செய்யவும், சர்க்கரையின் விலையை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு ஏற்றுமதி தடை விதித்தது. கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை இந்த தடை நீடிக்கும் என அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து மத்திய உணவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு தற்போது ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. அதாவது வருகின்ற அடுத்த ஆண்டு மே மாதம் வரை 60 லட்சம் டன் சர்க்கரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் 3 ஆண்டு சராசரி சர்க்கரை உற்பத்தியில் 18.23 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.