நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகில் கம்மவார்பாளையம் பேருந்து நிலைய தெருவில் சுரேஷ்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளனர். இதில் சுரேஷ் வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும் வேலை பார்த்து வருகின்றார். பிரசன்னா எல்லாரிடம் கலகலப்பாக பேசும் பழக்கம் உள்ளவர்.இது தொடர்பாக பிரசன்னாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஏற்பட்ட பிரச்சனையினால் சுரேஷ் பிரசன்னா உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டார். இதனை அடுத்து பிரசன்னாவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரசன்னாவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன்றி பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.