பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமா மாநகரில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா மண்ணெண்ணையை தனது உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து லாவண்யாவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் படுகாயமடைந்த லாவண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாவண்யாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.