சுவிட்சர்லாந்தில் மலைச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் Grabunden என்ற மாகாணத்திலிருந்து பாறைகள் சரிந்து Felsberg என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகளின் மேல் விழுந்தது. மேலும் இதன் மூலமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும் வீடுகளில் பாறைகள் விழும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் காயங்களோ, சேதமோ ஏற்பட்டதாக புகார்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீடு மட்டுமே பாறைகளால் சேதமடைந்தது என்றும் மக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மலைச்சரிவு தொடர்பாக புவியியலாளருடன் முதல் நிலையாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.