Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி….. சாலையில் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ம.மு கோவிலூரில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை சிவா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவருக்கு சதீஷ் என்பவர் உதவியாக சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் காக்காதோப்பு பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த சிவா மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |