Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்….. நிழற்குடைக்குள் புகுந்ததால் பரபரப்பு…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பயணிகள் நிழற்குடை கட்டிடத்திற்குள் புகுந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.சி பட்டியில் ஏலக்காய் வியாபாரம் செய்யும் சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காரில் ஆடலூர் நோக்கி புறப்பட்டனர். இந்நிலையில் கடையமலை பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அங்கிருந்த பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்துவிட்டது.

இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் படுகாயமடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராதாகிருஷ்ணனை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் நிழற்குடை கட்டிடம் சேதமடைந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |