தாராபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து எல் முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர்.
ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தாராபுரத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் இன்று தாராபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.