Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவுக்கு ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இளங்கோ ஒரு பெல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த இளங்கோ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |