Categories
மாவட்ட செய்திகள்

தாய் – மகனை கொன்று டிரைவர் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

திருச்சி திருவானைக்கால் அகிலா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34) என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் சாமிநாதன் (8). கார்த்திகேயனின் தாய் வசந்தா (63) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கார்த்திகேயன் 3 வருடங்களுக்கு முன்பாக கார் டிரைவர் வேலைக்காக  துபாக்கு  சென்றுள்ளார். விடுமுறை நாட்களில் அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கார்த்திகேயன் துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வசந்த பிரியா ஒரு கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் வசந்த பிரியா வேலை முடித்து வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த வசந்த பிரியா  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகேயன், அவரது தாய் வசந்தா மற்றும் அவரது மகன் சாமிநாதன் போன்றோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி  போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில் “கார்த்திகேயன் என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் என்னுடைய தாய் மற்றும் மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை தன்னுடன் அழைத்து செல்வதாகவும்” குறிப்பிட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து வசந்த பிரியா மற்றும் அவர்களின் உறவினர்களிடம் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |