Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபாலபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு பாண்டியன் (24) என்ற மகனும் இருந்தார். கடந்த மார்ச் மாதம் கலைச்செல்வி உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். இதனால் பாண்டியன் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பாண்டியன் கடந்த 30-ஆம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |