Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் மீண்டும் துப்பாக்கி சூடு… பெண் ஒருவர் பலி… விசாரணையில் அதிர்ச்சி..!

இந்நிலையில், மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்நாட்டில், பாங்காங் நகரின் டவுண்டவுன் பகுதியில் இருக்கும் ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கு காஸ்மெட்டிக் கிளினிக் பகுதியில் நின்று கொண்டு இருந்த 2 பெண்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு பெண் மட்டும் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார். மற்றொரு பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Image result for A woman was killed and at least one other wounded by a man with a gun ... the fatal shooting at a clinic inside the shopping
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய  28 வயதான டனுஷோர்ன் என்ற நபரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன், ‘‘சுட்டுக்கொல்லப்பட்ட பெண் என்னுடைய முன்னாள் மனைவி. அவள் வேறொரு ஆண் நபருடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என வாக்குமூலம் அளித்தான். ஏற்கனவே இது போன்ற சம்பவம் நடந்த நிலையில், தற்போது வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாங்காக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |