கர்நாடகா மாநிலம் மைசூரு பகுதியிலுள்ள குண்டுராவ் நகரில் வசித்துவருபவர் அர்பிதா. இவர் ஒரு மருத்துவர் ஆவார் .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து அர்பிதாவின் ஒன்பது மாத குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்காததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அர்பிதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் அர்பிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தனது குழந்தை தாய்ப்பால் குடிக்காத காரணத்தினால், மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.