Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஓகளூர் பகுதியில் ஆசிரியரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் ஈரோட்டில் இருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முத்துக்குமார் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 3 ஜோடி வெள்ளி கொலுசுகள், 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்குமார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |