பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பவானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ரகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பவானி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து பவானி தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
அவரது அலறல் சுத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பவானியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பவானி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.