சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவை உள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்தியா தவித்து வரும் நிலையில் ரஷ்யா விலங்குகளுக்கான கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அந்த மருந்தின் பெயர் carnivac-cov என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 17,000 டோஸ்களை தங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி உள்ளதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.