இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதாக ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் தவறான பொருளாதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கிறேன். மேலும் வந்துவிட்டது எனக் கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என நான் எச்சரிக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.