Categories
சினிமா

தள்ளி போன நயன்தாரா படம்…. இதுதான் காரணமா?…. இயக்குனர் திடீர் டுவீட்….!!!!

தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் “கோல்டு” பிரித்திவிராஜ் கதாநாயகன் நடிக்கும் இந்த படத்தில் அவர்கள் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் செய்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் “கோல்டு” செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோல்ட் திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எங்கள் தரப்பில் வேலை தாமதம் காரணமாக கோல்ட் திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாக இருக்கிறது. தாமதத்திற்கு எங்களை மனியுங்கள். கோல்டு வெளியாகும் போது இந்த தாமதத்தை எங்கள் வேலையின் மூலம் ஈடு செய்வோம் என்று நம்புகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |