Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பிரச்சனையால் பிரிந்த உறவு.. மகனை பார்க்க சென்ற தந்தை.. ஆத்திரத்தில் சீரழிந்த குடும்பம் ..!

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் இளம்பருதி. இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களால் இருவரும் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் தனது மகனை பார்ப்பதற்கு இளம்பரிதி சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த இளம்பருதி மனைவியை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டார்.

இதைப் பற்றி தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பருத்தியை கைது செய்தனர். மேலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர் ரத்னா இளம்பரிதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்த இளம்பருதியை, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைப்பதற்கு பரிந்துரை வழங்கினார். கணவன்- மனைவி பிரச்சனை… தந்தையின் ஆத்திர செயலால் ஒன்றும் அறியாத சிறுவன் ஆதரவற்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |