Categories
லைப் ஸ்டைல்

தலைமுடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு… நச்சுனு 4 டிப்ஸ்… ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் சொல்லுவீங்க…!!!!

உங்கள் தலை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும்.

தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் செய்து வந்தால் போதும். கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியாக நன்றாக வளரும். தலையும் குளிர்ச்சியாகும். செம்பருத்திப்பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டிய பிறகு தலைக்கு தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண மருதாணி இலையை அரைத்து,அதில் சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து எட்டு மணி நேரம் உலர வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த பேஸ்ட்டை தலையில் தடவி இரண்டு மணி நேரத்திற்கு பிறகு குளித்தால் பொடுகுத் தொல்லை இருக்காது. இதனை வாரத்தில் ஒருமுறை தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தய பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

Categories

Tech |