டெல்லியில் அத்துமீறி நுழைந்த காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் நாட்டின் சில பகுதிகளில் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பயங்கரவாதிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர்களின் திட்டத்தின்படி நேற்று மிலேனியம் பூங்கா பகுதியில் அத்துமீறி வந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த பயங்கரவாதிகள் 2 பேரும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அது மட்டுமன்றி அந்த பயங்கரவாதிகளிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.