Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் உள்பட 3 பேர் படுகாயம்…. திருச்சியில் கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் கலைவாணர் தெருவில் சபரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான அகஸ்டின்(29) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அகஸ்டின் ஐ.டி நிறுவன ஊழியரான விவேக்(29), அவரது அண்ணன் பிரவீன்(33) ஆகியோருடன் நண்பர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். பின்னர் நண்பரை பார்த்து விட்டு அவர்கள் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 வாலிபர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |