Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தலைக்கவசம் விற்பனை செய்த வாலிபர்…. அதிவேகமாக வந்து மோதிய கார்…. சேலத்தில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள குப்பூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணா(21) என்பவர் சாலையோரம் கடை அமைத்து தலைக்கவசம் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல ரமணா தலைக்கவசம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரமணா மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |