தர்மபுரி-காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார எழுச்சி நடன பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளான இன்று ஒகேனக்கலில் உள்ள கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவேரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பாசனத்திற்கும் குடிநீருக்காகவும் இல்லை, மாவட்டத்தின் மொத்த வேளாண்மை நிலப்பரப்பில் 45% மட்டும் பாசன வசதி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட இதே அளவிலான மக்களுக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி வழங்கப்படுகிறது. இந்த சிக்கலுக்கான தீர்வுதான் தர்மபுரி- காவேரி உபரி நீர் திட்டமாகும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும்.
அதனை போல மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு அடர்த்தி குறையும். கூடுதலாக 15 லட்சம் மக்களுக்கு ஃபுளோரைடு கலக்காத குடிநீர் கிடைக்கும். அதன் மூலம் தர்மபுரி மாவட்டம் மக்களை தாக்கி வரும் ஃபுளூரோஸிஸ் சிக்கலுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும். இதனால் மாவட்டத்தின் விவசாயம் செழிக்கும், வேலைவாய்ப்பு பெறுவோம். தர்மபுரி மாவட்ட மக்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டி இருக்காது. இத்தகைய சிறப்பான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக தர்மபுரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்து குரல் கொடுத்து வருகிறேன். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓகேனக்கலில் இருந்து பென்னாகரம், இரண்டூர், தர்மபுரி, கடத்தூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார நடை பயணமாக சென்று கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்.
அதனை தொடர்ந்து காவேரி ஆறு வழியாக சென்று உபரணி 35 நாட்களுக்கு 161 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. அதில் 3 டிஎம்சி நீரை தான் கேட்கிறோம். இதற்கு உண்டான திட்டத்தை நிறைவேற்றி ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்புவதற்கு ஓகேனக்கல் காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு அதிக அளவில் நிதி பங்கீடு தேவையில்ல ரூ.800 கோடி மட்டுமே தேவைப்படும். இந்த திட்டத்தை பொதுமக்களிடம் 10,30,000 கையெழுத்து பெற்று முன்னாள் முதல்வர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்து எந்த பயனும் இல்லை. இந்த பிரச்சாரம் நடைபெறும் என்பது அரசியலுக்காக அல்ல. இந்த திட்டத்தை வலியுறுத்தி செயல்படுத்தும் வரை ஓயமாட்டேன். இந்த திட்டத்தால் டெல்டா பாசன விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு வராது என்று அவர் தெரிவித்தார்.