Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்…. உடனடி நடவடிக்கை…? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திருநகர் காலனியில் கூலி தொழிலாளியான தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வெற்றிவேல்(13), சக்திவேல்(12) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் வெற்றிவேல் 8-ஆம் வகுப்பும், சக்திவேல் 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வள்ளி இறந்துவிட்டதால் வெற்றிவேலும், சக்திவேலும் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஆதார் எண் பெறுவதற்கு ஆதார் மையம் மற்றும் இ சேவை மையங்களில் விண்ணப்பித்துள்ளனர். ஆனாலும் விசாரணையில் நிறுத்தம், தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணங்களால் ஆதார் எண் வழங்கப்படவில்லை.

இதனால் சிறுவர்கள் தங்களது பெரியம்மா சுதாவுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் ஆதார் மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த மையத்தில் வேலை பார்ப்பவர்கள் ஏற்கனவே பதிவு செய்து தொழில்நுட்ப கோளாறு என கூறி நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே மீண்டும் பதிய இயலாது என தெரிவித்து அவர்களை அனுப்பினர். இதனால் மாணவர்கள் தங்களது பெரியம்மாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவுவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் மாணவர்களை ஆதார் மையத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் பதிவு செய்து கொடுக்குமாறு உத்தரவிட்டனர். இதுகுறித்து சுதா கூறியதாவது, மாணவர்கள் காப்பகத்தில் இருப்பதால் ஒவ்வொரு முறையும் சான்றுகளைப் பெற்று ஆதார் பதிவு செய்துள்ளனர். ஆனாலும் விடுதியில் தங்குவதற்கான பதிவில், ஆதார் எண்ணை இணைக்க முடியாததால் அரசு தரும் மானியத்தை பெற முடியவில்லை. வங்கி கணக்கும் தொடங்க இயலவில்லை தற்போது மீண்டும் பதிவு செய்துள்ளோம். இந்த முறை ஆதார் எண் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |