மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தரவு பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அதற்கு பதில் மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-யை உருவாக்கியுள்ளது. இதன் உட்பிரிவுகளில் தனிநபர்களின் மின்னணு தரவுகளை பாதுகாப்பதற்கான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால்,சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டால் 500 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவில் அபராத தொகை 15 கோடியாக இருந்த நிலையில் தற்போது 500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.