Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தரமான அரிசி வழங்க வேண்டும்…. “ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்”…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே சின்ன கொல்லியூரில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இந்த கடையின் மூலமாக 462 குடும்பத்தினர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் மக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக நின்றுள்ளனர். அப்போது கடையில் வழங்கப்பட்ட அரசு தரமற்றதாக இருந்தது. இதனால் பொதுமக்கள் நியாய விலை கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக கொள்ளியூர் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதுகுறித்து பகண்டை கூட்டுரோடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் தரமான அரிசி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |