பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தர நிர்ணய பரிசோதனையில் ஜான்சன் நிறுவன பவுடர் தரக்குறைவாக இருக்கிறது தெரிய வந்ததால் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் உரிமத்தை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்துள்ளது.
ஐஎஸ் 5339-2004 தர நிர்ணயத்திற்கு உட்பட்டு ஜான்சன் பவுடர் இல்லை எனவும் குழந்தைகளுக்கான PH பரிசோதனையிலும் போதிய தரம் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான தங்களது பவுடர் பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் பலவற்றிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.