Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தம்பி மகனுக்கு நடந்த திருமணம்…. அண்ணன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தம்பி மகனின் திருமணப் பத்திரிக்கையில் பெயர் போடாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தம்பி மகனின் திருமண பத்திரிக்கையில் சுப்பிரமணியின் பெயர் சேர்க்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி கடந்த-15 தேதி தனது வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |