Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே தகராறு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

மனைவி பிரிந்து சென்றதால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அய்யாறப்பர் தெற்கு வீதியில் கார்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணஞ்சேரி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வரும் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவரை காதலித்துள்ளார். அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்குமிடையே இருந்த கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணமான 5 மாதத்தில் கார்த்திகா தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து பெரியவர்கள் சமாதானம் செய்து கார்த்திகாவை மாரியப்பனுடன் சேர்ந்து வாழும்படி கூறியுள்ளனர்.

அதன்படி கார்த்திகா மாரியப்பன் வீட்டிற்கு சென்றபோது அங்கு வேறொரு பெண் இருந்துள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது மாரியப்பன் 1 வருடத்திற்கு முன்பு கார்த்திகாவுக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகா அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரியப்பனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |