தமிழர்களின் திருநாளான சித்திரைத் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் கோவில்களில் சென்று வழிபாடு நடத்துவார்கள். இந்த தமிழ் புத்தாண்டிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியும் கொடுக்க இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பிரார்த்திக்கிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.