நடிகை ஊர்வசியின் தம்பியான கமலுக்கு பிரமிளா என்ற மனைவி இருந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரமிளா கணவரை விட்டு பிரிந்து விழுப்புரத்தில் உள்ள அண்ணன் சுசீந்திரன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக இவர்கள் இருவருக்குமே வேலை இல்லாததால் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சுசீந்திரன் மற்றும் பிரமிளா இருவரும் வறுமையின் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வறுமையின் காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.