தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்கான பிளஸ் 1 மாணவர்களுக்கான திறனறித் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகின்றது.
அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு 2022-23 கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் தேர்வுக்கான பாட புத்தகம் ஆகும் தேர்வில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மூலம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றது.
இந்த தேர்வானது வருகின்ற அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வில் வெற்றி பெறும் 750 அரசு பள்ளி மாணவ-மாணவிகள், 750 இதர பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் 1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது என தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.