Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 1.13 லட்சம் மரணம் மறைப்பு….. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவியதை அடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும், தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகளும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு இறப்பு காரணத்திற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் குடும்ப தலைவர்கள் பலரை கொரோனா பலி வாங்கிவிட்ட நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளையும் தடுக்கும் வகையில் உயிரிழப்புகளை மறைப்பது கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |