தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இந்நிலையில் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.811 மின் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இன்று தொடங்கும் இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று ணைப்பு செய்துகொள்ளலாம்.