Categories
மாநில செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையெல்லாம் மாற்ற முடியாது…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுள்ள மாநிலங்களில் பாடப்படும் ஒரு வாழ்த்துப் பாடலாகும். இந்தப்பாடலை அதிகமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு விழாக்கள், கூட்டங்கள் முதலிய முக்கிய நிகழ்வுகளில் அனைவரும் பாடுவார்கள். தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவர். பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும், களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்” சீரிளமைத் திறம் வியந்து, செயல்மறந்து வாழ்த்துதுமே என்று கூறும் சில வரிகளை நீக்கிவிட்டு தமிழ்த்தாயை புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன.

இந்த பாடலை 1972-ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதியின் தலைமையில் செயல்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான பாடலின் சில வரிகளை திருத்தி அமைத்ததை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ.மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த 2007- ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் சமஸ்கிருதம் போல் இல்லாமல் இளமையாக தமிழ்மொழி இருப்பதை குறிப்பிடும் வகையிலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளை ஒப்பிட்டும் கூறப்பட்ட வரிகளை நீக்கியது.

ஆரிய மொழியைப் போல் உலக மொழியில் வழகழிந்தொழிந்து சிதைந்து போனது போல் இல்லாமல் தமிழ்மொழி சீரிளமைத் திறம் வியந்து வளரும் என்ற விளக்கத்துடன் இந்த பாடலை திருத்தி உள்ளதாகவும், இந்த செயல் மனோன்மணியம் சுந்தரனார்க்கு ஒரு மிகப்பெரிய அவமதிப்பை ஏற்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனால் திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்துள்ளதையும், விழாக்களில் பாடுவதையும், சட்டவிரோதமான செயல் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் சில வரிகள் எடுக்கப்பட்டதாகவும், பாடலை மாற்றி அமைக்க அரசு பொறுப்பில் இருப்பதாகவும், பாதுகாப்பின்மையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவித்ததுடன், வழக்கை தள்ளு படி செய்யுமாறும், கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 1972-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி முதல் பாடப்படும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை மாற்ற வேண்டும் என்று 37 வருடங்களுக்குப் பின்னர் வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |