மலையாள திரையுலகில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் அணில். இவர் முன்னணி மலையாள கதாநாயகனுடன் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தியத்தில் “மையா” படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இவர் தாமோர் சினிமா தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அனில் அறிமுகமாகிறார். இதில் சௌந்தரராஜன் கதாநாயகானாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சாயாவானம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் தேசிய விருதுகள் பெற்ற அப்புகுட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்து போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் பெரும் பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் மூடுபனி, மழை மற்றும் காடுகளில் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் விரைவில் இந்த படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.