தமிழரின் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய கலை பன்னாட்டு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர்களின் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய கலை பன்னாட்டு துறை அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார். 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப மேலும் இசை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Categories
தமிழர் கலைகளை பரப்ப நடவடிக்கை…. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு….!!!
