Categories
மாநில செய்திகள் விவசாயம்

தமிழக விவசாயிகளே!…. உடனே இதை செய்து முடிங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக  பல நலத்திட்டங்களை உள்ளடக்கி 2022-23ம் வருடத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்துக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர்சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் ஆகிய வேளாண் குறித்த பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம், 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பயிர் சாகுபடி செய்தால் அறுவடையின்போது மட்டுமே வருமானம் கிடைக்கும். வருடம் முழுதும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்க பயிர்சாகுபடியுடன் விவசாயம் சார்ந்த பல தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொண்டால் விவசாயிகள் மட்டுமின்றி அவர்களின் வீட்டிலுள்ள பெண்களுக்கும் வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் கூடுதல் வருமானமும் ஈட்டஇயலும். முதல் கட்டமாக 3,700 ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகள் அமைக்க 18 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளித்து இப்போது வேளாண்மை-உழவர் நலத்துறையினால் அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டத்தில் பயிர் சாகுபடியுடன் வேளாண்சார்ந்த அனைத்து வகை பணிகளை 1 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பண்ணைய செயல் விளக்கம் அமைப்பதற்கு 50 %  மானியம் வழங்கப்படும். அதன்படி, ஊடுபயிர் (அ) வரப்புப் பயிர் சாகுபடிக்கு ரூபாய்.5,000, கறவை மாடு (அ) எருமைமாடு ஒன்று வாங்குவதற்கு ரூபாய்.15,000, 10 ஆடுகள் வாங்க ரூபாய்.15,000, 10 கோழிகள் வாங்க ரூபாய்.3,000, 2 தேனீப் பெட்டிகளுக்கு ரூபாய்.3,200, 35 பழமரக் கன்க்கு ரூபாய்.2000, கால்நடைகளுக்கு தேவையான பசுந் தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக 10 சென்ட் பரப்பில் தீவன பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ரூபாய்.800, மண்புழு உரத் தொட்டி அமைக்க ரூபாய்.6,000 ஆக மொத்தம் ஒரு எக்டரில் ஒருங்கிணைந்த பண்ணையத் திடல் அமைப்பதற்கு 50 % மானியமாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

சிறு-குறு விவசாயிகள் இனத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் இந்த திட்டத்தின் பலன்களை முழுமையாகப் பெற கூடுதலாக 20 % அதாவது ரூ.50,000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000 என மொத்தம் ரூபாய் 70,000 மானியமாக வழங்கப்படும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பரிந்துரை செய்யப்படும் பால் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரத் தயாரிப்பில் ஈடுபடாமல் பயிர்சாகுபடி மட்டும் மேற்கொள்ளும் விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் பயனாளியாக முடியும். இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் குறைந்தபட்சம் 1 எக்டர் வைத்திருக்கவும்.

ஆதி திராவிடர், பழங்குடியினர் விவசாயிகளாக இருப்பின் குறைந்தபட்சம் 1 ஏக்கர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப் பஞ்சாயத்துகளிலுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஆதார் கார்டுடன் நிலம் வைத்திருப்பதற்கான ஆவணத்தையும் வருவாய்த்துறையிடமிருந்து பெற வேண்டும். கூடுதலாக 20 % மானியத்தை பெற ஆதி திராவிடர் (அ) பழங்குடியினர் சான்றிதழுடன் சிறு-குறு விவசாயிகளுக்கான சான்றிதழையும் வருவாய்த்துறையிடம் பெறவேண்டும்.

இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி வாயிலாகவோ www.tnagrisnet.tn.gov.in (அல்லது) www.tnhorticulture.gov.in இணையதளம் மூலமாகவோ தேவையான விவரங்களை அளித்து முன் பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு உங்களது வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களையோ (அ) தோட்டக்கலைத் துறை அலுவலர்களையோ தொடர்புகொள்ளலாம். வருடம் முழுதும் வேலைவாய்ப்புடன் கூடுதல் வருமானமும் ஈட்டுவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு தமிழக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.

 

Categories

Tech |