தமிழகத்தில் வாகன ஸ்டான்ட்களில் வெளி ஊருக்கு செல்பவர்கள் மற்றும் பணிக்குச் செல்பவர்கள் அனைவரும் தங்களது வண்டி வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அங்கு நிறுத்துவதற்கு குறைந்த கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் வெளியூரில் பணிபுரிபவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல படை எடுத்தனர். அதனால் வாகன ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் ஸ்டாண்டுகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அவ்வகையில் சைக்கிள்களுக்கு ஐந்து ரூபாய், பிறர் இருசக்கர வாகனங்களுக்கு பத்து ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய் வசூலிக்கப்படுவது தொடர்ந்து புகார் எழுந்து உள்ளது. இந்த புகார் பல மாவட்டங்களில் தொடர்ந்து வந்த மாயம் ஆகவே உள்ளது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் இது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான புத்தகங்கள் மற்றும் இருசக்கர வாகன ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் 1913என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் அல்லது உரிய ஆய்வாளரிடம் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.