தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை வழங்கினால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார். ரேஷனில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். ரேஷன் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.