Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பொங்கலுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் டோக்கன் மூலமாக விநியோகிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பாக பச்சரிசி ஒரு கிலோ, வெள்ளம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், ஆவின் நெய் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம் ஆகியவை வழங்கப்பட்டதுடன் சேர்த்து கடுகு, சீரகம்,மிளகு உள்ளிட்ட பல பொருள்களும் கரும்புடன் சேர்த்து வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு அரசு உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அது கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் குளறுபடி நடந்ததாக பலரும் விமர்சித்த நிலையில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் வந்து சேர்ந்தது .

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆரம்பத்தில் பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.பின்னர் மக்களின் நலனை கருதி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எனவே பொங்கல் பரிசு தொகப்பாக இந்த வருடம் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |